top of page

சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்த அழைப்பு

Tamil Murasu | 31 December 2021

 
சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடிய பல்வேறு சமயத் தலைவர்கள்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிறகு அடுத்­த­டுத்து கிரு­மிப்­ப­ர­வல்­கள் ஏற்­பட்­டா­லும் தவ­றான மனப்­போக்­கு­க­ளைக் களைந்து ஆக்­க­க­ர­மான எண்­ணங்­களை வளர்க்­கும் நோக்­கில் பல்­வேறு சம­யத் தலை­வர்­கள் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­ட­னர்.



சமய நல்­லி­ணக்­கத்தை மேம்­ ப­டுத்­தும் ‘ஹியு­மெ­னிட்டி மேட்­டர்ஸ்’ அமைப்பு, ஃபெய்த்­ஃபுலி ஆசி­யான் 2021 என்ற நிகழ்ச்­சியை டிசம்­பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்­தி­யது.


‘புராமா செண்­டர்’ ஹோட்­ட­லில் திங்­கட்­கி­ழமை 27ஆம் தேதி மாலை­யன்று நடை­பெற்ற முதல் நாள் நிகழ்ச்­சி­யின் போது ‘மைண்­டிங் தி மிஸ்­டரி- டிசீஸ் எக்ஸ்’ என்ற கலந்­து­ரை­யா­டல் அங்­கம் வகித்­தது.


ஆசி­யான் நாடு­க­ளைச் சேர்ந்த 40 பங்­கேற்­பா­ளர்­களும் 150 வரு­கை­யா­ளர்­களும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.


நிகழ்ச்­சி­யின் தொடக்க உரையை ஆற்­றிய ஹியு­மெ­னிட்டி மேட்­டர்ஸ் சமய நல அமைப்­பின் தலை­வ­ரும் முன்­னாள் ஆசி­யான் தூத­ரா­க­வும் செயல்­பட்ட ஓங் கெங் யோ, கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லில் பொய்த்­த­க­வ­லைக் கையாள சமு­தா­யத்­திற்கு வழி­காட்­டும் பொறுப்பு சமய அமைப்­பு­க­ளுக்கு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.


“பகை­மைப்­போக்­கும் வெறுப்­பு­ணர்­வும் சில வேளை­களில் நமக்­குத் தெரி­யா­ம­லேயே நம்­மி­டையே தலை­தூக்­க­லாம்.


“இது­வரை நாம் கட்­டிக்­காத்து வந்த ஒற்­று­மையை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் தொடர்ந்து தனி­ம­னி­தர்­க­ளா­க­வும் சமு­தா­ய­மா­க­வும் கட்­டிக்­காப்­பது முக்­கி­யம்,” என்று அவர் கூறி­னார்.


திரு ஓங்­கின் உரைக்­குப் பிறகு, ‘டிசீஸ்-எக்ஸ்’ என்ற கருத்­த­ள­வி­லான (hypothetical) கிரு­மிப்­ப­ர­வல் தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்­டது.

பௌத்த, இஸ்­லா­மிய, கிறிஸ்­துவ மற்­றும் இந்து சமயங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் பங்­கேற்று தங்­க­ளது கருத்­து­களை வெளிப்­ப­டுத்­தி­னர்.


மனம் திறந்து பேசு­வ­தற்­கும் புரிந்­து­ணைர்வை வளர்ப்­ப­தற்­கும் இது போன்ற நிகழ்ச்­சி­கள் உத­வு­ வ­தாக இந்து சம­யத்­தின் சார்­பில் பேசிய இயன் மருத்­து­வர் திலகா கோவிந்­த­சாமி தெரி­வித்­தார்.


“இனம், சம­யம் ஆகிய வேறு­பா­டு­கள் இருந்­தா­லும் நமது மனி­தத்­தன்­மையை நமக்கு நினை­வு­ ப­டுத்­தும் தரு­ணங்­க­ளாக இத்­த­கைய கலந்­து­ரை­யா­டல்­கள் அமை­கின்­றன,” என்று ‘ஹியு­மெ­னிட்டி மேட்­டர்ஸ்’ அமைப்­பின் நிர்­வாக சபை­யின் உறுப்­பி­ன­ரா­ன திரு­வாட்டி திலகா தமிழ் முர­சி­டம் கூறி­னார்.


“ஏற்­கெ­னவே திறந்த மன­து­டன் நிகழ்ச்­சிக்கு வரு­ப­வர்­கள் அந்­ நி­கழ்ச்­சி­யால் பய­ன­டைந்து திருப்­தி­யு­டன் திரும்­பு­கின்­ற­னர்.


“ஆனால் சகிப்­புத்­தன்மை குறை­வா­ன­வர்­கள் இத்­த­கைய நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வ­தில்லை. அத்­த­கை­யோ­ரும் மனம் திறந்து பேசு­வ­தற்­கான பாது­காப்பு உணர்வு அளிக்­கப்­ப­ட­வேண்­டும்.


“அத்­த­கைய உணர்வை ஏற்­ ப­டுத்­தும் கலையை இத்­த­கைய நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வ­தன்­மூ­லம் மெல்­லக் கற்று வரு­கி­றேன்,” என்று நிகழ்ச்சி பார்­வை­யா­ள­ரான தொடக்­கக் கல்­லூரி ஆசி­ரி­யர் குர்­மிட் சிங் தெரி­வித்­தார்.


இந்த மூன்று நாள் நிகழ்ச்­சி­யில் சுற்­று­லாக்­களும் திரைப்­ப­டக் காணல் ஒன்­றும் இடம்­பெற்­றன.

bottom of page